Tuesday, 14 August 2012


டி.இ.டி.தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்வெறும், 11ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால்குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40சதவீதமாகக் குறைக்கடி.ஆர்.பி.திட்டமிட்டுள்ளது.கடந்த மாதம், 12ம் தேதிஆசிரியர் தேர்வு வாரியம்முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்ததுநேரமும் போதவில்லை. இதனால்அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லைஎனதேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில்தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாகதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுமுடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியைஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில்வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவதுதேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.

டி.இ.டி.தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்யடி.ஆர்.பி.திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதுடி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்குகுறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்குமூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால்தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில்பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால்வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குடி.ஆர்.பி.தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்துடி.ஆர்.பி.வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில்தகுதி மதிப்பெண்களாககுறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால்மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால்,தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்துஆலோசனை நடந்து வருகிறது.ஒரு பணியிடத்திற்குமூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்அதை மனதில் கொண்டுஉரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகைஇந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன்உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில்வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால்உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்துஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.எஸ்.சி., -எஸ்.டி.மற்றும் எஸ்.சி.அருந்ததியர் பிரிவினருக்குகூடுதல் சலுகை அளிப்பது குறித்தும்,ஆலோசனை நடக்கிறது.இவ்வாறுடி.ஆர்.பி.வட்டாரங்கள் தெரிவித்தன.

State Eligibility Test (SET)


அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு-


சென்னை: மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம் தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது.
புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.
யு.ஜி.சி. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் பாடப்பிரிவுகள், மானுடவியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை.
முதுநிலைப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.